-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்த வாக்காளர்கள் 13,59,692
நாகர்கோவில், அக். 1:÷கன்னியாகுமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் திங்கள்கிழமை (அக். 1) வெளியிட்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு அவர் பேசியதாவது: 01.01.2013-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்தல் பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் 01.10.2012 தேதியின்படி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வரைவு வாக்காளர் பட்டியலின்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் [...]
-
அணுஉலையை மூடக் கோரி கூடங்குளம் செல்ல முயன்ற 41 பேர் கைது
நாகர்கோவில், அக். 2:÷அணுஉலையை மூடக்கோரி திங்கள்கிழமை கூடங்குளத்துக்கு புறப்பட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினரை அஞ்சுகிராமத்தில் தடுத்து நிறுத்தி போலீஸார் கைது செய்தனர். கூடங்குளம் அணுஉலையை மூட வேண்டும். போராட்டக்குழுவினர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் இருந்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் வேன்களில் கூடங்குளத்துக்கு புறப்பட்டனர். கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.எம். அந்தோனிமுத்து தலைமையில் சென்ற 21 பெண்கள் உள்ளிட்ட 41 பேரை அஞ்சுகிராமம் அருகே கன்னியாகுமரி [...]
-
குமரி கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் உண்ணாவிரதம்
நாகர்கோவில் : நாகர்கோவில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் வரும் 9ம் தேதி கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர். சி.எஸ்.ஐ. பிரதம பேராயர் தேவகடாட்சம், கோட்டார் மறைமாவட்ட பிஷப் பீட்டர் ரெமிஜியுஸ், மார்த்தாண்டம் மறைமாவட்ட பிஷப் வன்செட் மார் பவுலோஸ், தக்கலை மறைமாவட்ட நிர்வாகி கொடியந்தரா, பெந்தேகோஸ்தே சபைகளின் கூட்டமைப்பு சைமன், இந்திய சுவிசேஷ லுத்தரன் சபை தலைவர் ஆல்வின் சந்திரா சுரேஷ், ரட்சணியசேனை மாகாண தளபதி ஜெயசீலன், இந்திய சுவிசேஷ சபை தலைவர் [...]
-
நாளை காந்தி ஜெயந்தி குமரி காந்தி மண்டப மேடையில் அபூர்வ ஒளி
கன்னியாகுமரி : தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் ஜெயந்திவிழா நாளை (2ம் தேதி) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் விழும் அபூர்வ சூரிய ஒளியைக் காண பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர். நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட மகாத்மாகாந்தியடிகள் 1948ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் டில்லியில் தகனம் செய்யப்பட்டது. பின்னர் அவரது அஸ்தியை கலசங்ளில் சேகரித்து நாட்டில் உள்ள புனிதநதிகள்,கடல்கள், மலைகள், காடுகள் போன்றவற்றில் தூவவும்,கரைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி 1948ம் [...]
-
கூடங்குளம் அணுஉலையை மூடக் கோரி படைப்பாளிகள் உண்ணாவிரதம்
நாகர்கோவில், செப். 30: கூடங்குளம் அணுஉலையை மூடக் கோரி நாகர்கோவிலில் படைப்பாளிகள், கல்வியாளர்கள் சனிக்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் படைப்பாளிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் பங்கேற்றனர். உண்ணாவிரதத்தை கவிஞர் லட்சுமி மணிவண்ணன் தொடக்கிவைத்தார். தமிழாலயம் இயக்குநர் கு. பச்சைமால், டாக்டர்கள் லால்மோகன், வரதராஜ், சொக்கலிங்கம், கவிஞர்கள் ரசூல், தமிழ்க்குழவி, காலச்சுவடு ஆசிரியர் கண்ணன், புலவர் செல்லம், இனியன்தம்பி, தெய்வநாயக பெருமாள், சிவராமன், சாகுல் அமீது, மதுரை கதிர்வேல் பங்கேற்றனர். மக்களின் உயிருக்கு [...]
|